Translate

Monday, November 24, 2008

இற்று போகா நினைவுகள்!

பார்வை மட்டும்
உனையேத் தொடர,
உயிர் மட்டும்
உடலில் இருக்க,
நினைவுகள் மட்டும்
நீக்கம் அடைந்தால்!
துன்பம் என்ற
உணர்வுகள் இன்றி,
நடக்கின்ற பிணமாய்
நானும் வாழ்வேன்.
ஆனால்,
ஏக்கம் கொண்டு
மனமும் அலைய,
துன்பம் என்ற
உணர்வுகள் தொடர,
மனத்தின் வலிகளை
உணரும் இதயம்
நிலையின்றி துடிக்க,
வழியின்றி திகைத்தேன்
வலிகளை மறக்க.

No comments: