Translate

Saturday, August 2, 2008

மணமகளைப் பார்த்த படலம்- ஒரு திருத்தம்

யாம் கேட்டுணர்ந்த செய்தியில், கவிதையாக வடிக்கும்போது கீழ்கானும் ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.



''என் நினைவு அகலாது
என்றுமே இணைந்திருக்க
அவன் விரலில்- அவளும்
கணையாழி ஒன்றினையே
அணிந்துத்தான் விட்டாளே.''




மேலே கண்ட செய்தி நடைப்பபெறா நிகழ்ச்சியாகும். நடைப்பெற்ற நிகழ்ச்சசியை கீழ்கானும் வகையிலே கவிதையாக வடித்துள்ளேன்.பொருத்துக் கொண்டு வாசியுங்களேன்.

கண்டதும் காதலால்
கவர்ந்து விட்ட கள்வனுக்கு,
கனிந்து வரும் காலத்தை
கண்டுணரும் நோக்கமதில்,
காலம் காட்டி ஒன்றினையே
களிப்புடனே பூட்டி விட்டாள்.

தனக்கென்றே உரிமையென
தயங்காமல் வரிந்துக் கொண்ட
தலைவனுக்கு, தானும் தான்
தளும்புகின்ற மகிழ்வுடனே
தங்கச்சங்கிலி ஒன்றினையும்
தவள விட்டாள்- அவன் மார்பினிலே.

No comments: