Translate

Sunday, August 3, 2008

அனுப்பிய வாழ்த்து

எமது சகோதரியின் மகள் நீத்துவின் திருமணத்துக்கு அனுப்பிய வாழ்த்து கவிதை.


விழித்த விழிகளோ புது மலராய்
இனித்த நினைவுகளாய்

இன்று முதல் தொடரட்டும்.

வண்ணமிகு தோட்டத்தில்


வாசனை மலர்களாய்
வாசமது எங்கும் பரவட்டும்.


உம் குடும்பமெனும்
தோட்டத்தில்
பசுமை என்றும் நிலைக்கட்டும்.

வாழ்க்கையெனும் படகு


மகிழ்ச்சிக் கடலில்
நிலைத்திருந்து மிதக்கட்டும்.


கண்ட கனவுகளோ
நிற்கும் நினைவுகளாய்

நித்தமும் நிகழட்டும்.


பார்த்த பார்வைகள்
பகிர்ந்து கொள்ளட்டும்.


பாசமெனும் வலையாய்
பின்னிக் கொள்ளட்டும்.


ஆனந்த வெள்ளமோ
அருவியாய் பொழியட்டும்

இன்ப வாழ்வோ
ஆல் போல் செழிக்கட்டும்.


விழுதுகளாய் விரிந்து
நிலையாய் திகழட்டும்.


இனிமையாய் இல்லறம்
நயமாய் நல்லறம்

இணைந்தே இருக்கட்டும்.


இன்றிணையும் நீவீர்,
பல்கி பெருக வேண்டும்.

குடும்பமாய் விரிய வேண்டும்.


குறைவிலா வாழ்வு
அமைய வேண்டும்.


குணவதியே! அவர் குணமறிந்து
உன் வசப்படுத்த வேண்டும்


குள விளக்கே, உன்னொளி
அவர் இதயமதில் ஒளிரவேண்டும்.


உம் இதயங்களை
மாற்றியே குடியேற வேண்டும்.


வேண்டும் வேண்டும்
எத்தனையோ வேண்டும்.

அத்தனைக்கும், இறைவனின்
அருள் வேண்டும்.


எடுத்து வைக்கும் அடிகளெல்லாம்
நிலையாய் செல்ல,

உறுதியாய் இருக்க,
உற்றதுணையுடன் இணைந்தே நடக்க,

இருபக்க நினைவுகளும்
இணைந்தே இருக்க,

செல்லும் வழியோ
சேர்ந்தே இருக்க,

இன்று போல் என்றுமே
இன்பமாய் வாழ்ந்திடவே,


வாழ்க! வாழ்க!! நலமாக!!!
பல்லாண்டு வாழ்க! சுகமாக!!!

என்றே ஆசிகள் பலநல்கி,
வாழ்த்தினோம் மனந்திறந்தே.






மாமா,
ஏ.எம். பத்ரி நாராயணன்.@

தவப்புதல்வன்

2 comments:

Anonymous said...

வாழ்க!! நலமாக!!!

பல்லாண்டு வாழ்க! சுகமாக!!!

Dhavappudhalvan said...

நன்றி சகோதரி