Translate

Thursday, August 7, 2008

பிமரத சாந்தி- 70 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து

எமது மதிப்பிற்குறிய தந்தை திரு.P.A. மாணிக்கம் செட்டியார் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 1991-92 ல் நடைப்பெற்ற போது, எமது தந்தைக்கும், தாயார். திருமதி. பாக்யலக்ஷ்மி அவர்களுக்கும் எமது சகோதரிகளால் வாசித்து அளிக்கப்பட்ட வாழ்த்து மடல் இது.
**********************

அன்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஆற்றலைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

இனிமையால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஈகையைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

உழைப்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஊக்கத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

எழுபதைக் கண்டு உயர்ந்தது உங்கள் பருவம்.

ஏற்றத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஐயம்பல தீர்த்து உயர்ந்தது உங்கள் பருவம்.

ஐயமின்றி உயர்ந்தது எங்கள் புருவம் .

ஒளிமயமாய் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஓங்குபுகழ் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஔவை நெறியில் உயர்ந்தது உங்கள் பருவம்.

அஃதை பார்த்து உயர்ந்தது எங்கள் புருவம் .

2 comments:

Rini said...

அ முதல் அஃ வரை பாடும் உங்களின் திறமையை கண்டு உயர்ந்தது "எங்கள் புருவம்"

அன்புடன்
தமிழ்நாட்டு தமிழச்சி ..

Dhavappudhalvan said...

அன்புடன் தமிழ்நாட்டு தமிழச்சிkku..,

I'm happy and Thanks for your comment. Now Tamil Fonts problem.