Translate

Thursday, November 29, 2007

என்று புரியுமோ !

காலமோ கடக்கிறது
எனை விட்டு பிரிந்து।

பேசுகிறாய் சில வார்த்தைகள்
அவசியத் தேவையினால்।


உயிரற்ற பார்வைகளாய் மோதுமே
நொடி சில மட்டுமே।

ரசிக்கிறேன் உன் உருவத்தை
மனத்தில் நிறைத்துக் கொள்ள।

வாயிருந்தும் பேச முடியவில்லை
போட்ட தடையினால்।

சேர வாய்ப்பில்லையோ
நினைத்தாலே பதறுகிறதே
உடலும் உள்ளமும்।

வினாக்களால்
மண்டையோ குடைகிறது
புரிய வைக்க தெரியாமல்।

உன் வாய் வார்த்தைகள்
எனக்கு
உற்சாகம் கொடுக்கும்।

உன் நெருக்கம்
வாழ்வில்
நம்பிக்கையைக் கொடுக்கும்।

நீ கைக்கொடுத்து என்னை
கோபுரத்துக்கு
கொண்டு செல்।

வெறுப்புக் கொண்டு
குப்பை மேட்டில்
போட்டு விடாதே।

பிராத்திக்கிறேன்
நாள் தோறும்
இறைவனிடம்,
உன் அன்பு கிடைக்க.

நீ பிரிந்தாய்
எனை அறிந்துக் கொள்ளாமல்।

என் உயிரும் பிரியட்டும்
நீ அறியாமல்।

உயிர் பிரியும்
நேரத்தில் தான்
கிடைக்குமா
உன் அருள் பார்வை।

உயிர் போக்கவோ
எனக்கு விருப்பமில்லை।

மனச்சுமையால் தினறுகிறது
என் உயிர் மூச்சு.

No comments: