Translate

Wednesday, July 23, 2014

இப்படியுமா...


உறங்கும் நேரத்திலும் 
உறங்காமல் இருந்தது.
விடியும் காலத்திலே  
விழிக்க வைத்தது 
காலை முதல் மாலை வரை
கடனென கழிந்தது.
மாலை பொழுதிலும் 
மல்லுக் கட்டியது.
ஓடிய நேரத்திலும் 
ஒட்டியே வந்தது.
இப்படியிப்படி என .
இழுத்துச் சென்றது.
மயங்கா என்னை 
மயக்க வைத்தது.
உணவையும் உணர்வையும் 
உதற செய்தது.
இயங்கிய என்னை, (ஏனோ) 
இயங்காமல் செய்தது.
புரியாத புதிராய் எனை 
புதைத்து விட்டது.
புல்லு முளைக்குமோ 
புதையுண்ட இடத்தில் 
பரிதாபம் வேண்டாமே 
பாவமாய் எண்ணி.

No comments: