கருவறையின் கருவுக்கென
நிதம் நிதம் யோசனைகள்.
கணக்கிலா ஆசைகள்
வண்ணங்களாய் அசைப்போட,
நீங்கா நினைவுகள்
மனதினை தடவிப் பார்க்க,
காணும் பிம்பங்களோ
கனவிலும் காட்சித் தர,
கனவுகளும் நிசமாகி, பொன்குஞ்சை
கையணைக்கும் நாளதில்,
பொங்குமது நெஞ்சமம்மா
பூம்புனலாய் ஆர்பரித்து.
நலமாக ஈன்றெடுத்து
சிறப்புடன் வளர்த்தெடுக்க,
அளவில்லா ஆசையுடன்
பாசமுடன் பிரார்த்திக்கிறோம்.
--
அன்புடன் அப்பா.A.M.பத்ரி நாராயணன்.
அம்மா.ராஜராஜேஸ்வரி.B
2 comments:
super keep rocking
super keep rocking
Post a Comment