Translate

Saturday, May 14, 2011

அன்பு தோழி சத்யபாமாவுக்கு நன்றி.

வான்வெளியில் நாடு கடந்து

கைப்பேசி ஒலி வழியே

ஆனந்தமாய் ஒலித்தது

வாழ்த்துக்களை கூறிடவே.

நட்பு என்ற நிலையாலே

நாடு கடந்த வாழ்த்திது.

ஆர்பரிக்கும் கடல் போல

ஆவலாலே அதிர்ந்தது.

மடைதிறந்த வெள்ளம் போல

மகிழ்ச்சியாய் பாய்ந்தது.

அருவியில் நனைவது போல்

ஆனந்தமாய் இருந்தது.

உணர்வுகளை வெளிக்காட்ட

வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.

உன்னத நட்பொன்றை

அறிந்துக் கொண்டேன்

உம் குரலின் ஒலியாலே.

நன்றி பகர வார்த்தையின்றி

மகிழ்வுகளைப் பகிர்ந்துக் கொண்டேன்

தோழி உமக்கு யான்.

-தவப்புதல்வன்.



  • கிழ்வுடன் கருத்திட்ட முகநூல் நண்பர்கள்:-
    • Vasanthakumar Graphicdesigner நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????
      May 10 at 1:25pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ‎@ Vasanthakumar Graphicdesigner:- ///நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????///
      1) என்ன நம்பர் எனக்கு கொடுத்திங்க? 2) " பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி நன்றி..." என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதையில் உங்கள் பெயருடன் புகைப்படமும் பதித்து, அதற்கு கீழ் உமக்கு வாழ்த்துடன்நன்றி தெரிவித்துள்ளேனே. அக்கவிதையை கவனிக்கவில்லை என நினைக்கிறேன். வாசித்து பதில் எழுதுங்கள். 3) நான் சாதாரணமானவன். உணர்வுகளின் உந்துதலால் எழுதுபவன். நேற்று எம் மகளின் பிறந்த நாளுக்கே எம் விருப்பப்படி கவி வழி வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. 4) சமயம் வாய்க்கும்போது தங்களுக்கும் வாழ்த்துபா இசைக்கமுடியுமென நம்புகிறேன். தனியாக முயற்சிப்பதில்லை. இனிய நாளாக கழியட்டும்.
      May 10 at 1:40pm · · 2 people
    • Vasanthakumar Graphicdesigner அண்ணா சும்மா கேட்டேன்..உங்கள் நட்பே போதும் அண்ணா..சத்தியபாமாவுக்கு உங்கள் நம்பரை கொடுத்ததே நான் தான் அண்ணா..
      May 10 at 1:41pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M அது எனக்கு தெரியும். சகோதரி நான் கேட்காமலே தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி.
      May 10 at 1:44pm · · 2 people
    • Sathiabama Sandaran Satia நட்பென்னும் முத்தெடுக்க கடல் தாண்டினால் என்ன மலை தாண்டினால் என்ன..உங்களை போன்ற கவிப்பெருங்கடலின் நட்பை பாராட்ட நான் பகர்ந்த வாழ்த்துக்கள் மிக சாதாரணமே..அதற்க்கு தாங்கள் எனக்கு வாழ்த்து பொழிந்திருக்கும் இந்த உன்னத கவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் கவிப்பெருன்கடலே...வாழ்க உன் கவி வளர்க நமது நட்பு....நன்றிகள் பத்ரி சார்.....
      May 10 at 1:46pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia அருவியில் நனைவது போல் ஆனந்தமாய் இருந்தது.
      உணர்வுகளை வெளிக்காட்ட வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.////// நித்தமும் உன்மது கவிக்கடலில் மூழ்கும் எங்களுக்கு தாங்கள் செய்திருக்கும் நன்றி பகர்தல் நன்றிக்கே இலக்கணமாய் அமைந்ததே நன்றிகள் சொல்லி கொண்டே இருந்தாலும் தீராது எண்கள்

No comments: