Translate

Saturday, May 14, 2011

தவிக்கும் உள்ளங்கள்.

தாங்கொன்னா மகிழ்வுடனே

அலையலையாய் ஒலியலைகள்,

மீண்டும் மீண்டும் அவரிடமே

தாங்கி வந்தது

வாழ்த்து சொல்ல.

தாராள மனமுடனே

தவப்புதல்வனென எமை அழைத்து

ஆனந்தத்தில் ஆழ்த்தினாரே.

ஆனாலும் ஒலியலைகள்

ஒற்றுமையில்லா நிலையாலே

செவிமடுக்க முடியவில்லை

செய்தியினை முழுமையாக.

ஏக்கத்தில் முடிந்ததையா

நண்பர் முகவரி ஏதுமின்றி.

அவரும் தான் தவித்திருப்பார்

தொடர்பிலே முழுமையின்றி..

தனிப்பட்ட செய்தி ஒன்று

எமை வந்து சேருமென்று.

விழி விரித்து காத்திருப்பேன்

விரைவில் செய்தி கிடைக்குமென்று.

நன்றிகளை பகர்கின்றேன்

அவரும் எம் நிலை உணர்ந்திடவே.

-தவப்புதல்வன்.


http://www.facebook.com/note.php?note_id=171460362912303
  • சொன்னார்கள் முகநூல் நண்பர்கள்:-.
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      தவப்புதல்வன் இருக்கிறாரா என அவரழைக்க. ஆமாம் பத்ரி நாராயணன் பேசுகிறேனென இயல்பாகக் கூற, ஆனால் அவரோ தவப்புதல்வனிடம் பேச வேண்டும் வாழ்த்து சொல்ல என திரும்ப திரும்ப அழைக்க ஒரு புறம் மகிழ்வாக இருப்பினும், அலைப்பேசியில் இணைப்பு சரியாக கிடைக்காமையால், மற்றொரு புறம் அவரின் ஆசையான, அன்பான வாழ்த்துக்களை முழுமையாகப் பெற்று, அவரையும் உணர்ந்து மகிழ்வை பகிர்ந்துக் கொள்ள முடியவில்லையே என ஏக்கம்தான். இதை வாசித்தால் அவரிடமிருந்து செய்திக்காக காத்திருக்கிறேன்.
      May 10 at 12:01pm · · 3 people
    • Gajan Gajah மிகவும் அருமை நண்பரே, அடியேனின் வாழ்த்துக்கள் பல கோடி..
      May 10 at 12:18pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Gajan Gajah:- நன்றி நட்பே. மதிய வணக்கம். இனிய நாட்களாக கழியட்டும்.
      May 10 at 12:35pm · · 2 people
    • ரவி சாரங்கன் தவப்புதல்வனுடன் பேச மா தவம் செய்திட வேண்டும் அந்த மாதவன் அனுக்ரஹத்தில் விரைவில் அவரும் தங்களிடம் பேசுவார். அடியேனும் பேசுவேன்.
      May 10 at 12:54pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ ரவி சாரங்கன்:- ///தவப்புதல்வனுடன் பேச மா தவம் செய்திட வேண்டும் அந்த மாதவன் அனுக்ரஹத்தில் விரைவில் அவரும் தங்களிடம் பேசுவார். அடியேனும் பேசுவேன்.///
      வணக்கம் ஐயா. யான் அந்த மாதவன் அனுக்ரஹத்திற்காக காத்திருக்கும் மிக மிக சதாரணன். தங்களின் ஆசிகளின் படியே அவரும் தொடர்புக் கொள்ளட்டும். தங்களை சந்திக்கவோ, குரலோசை செவிமடுக்கவோ வாய்ப்பிருப்பின் யான் தான் பாக்யவான். மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் வாழ்த்துக்கு.
      May 10 at 1:04pm · · 2 people
    • ரவி சாரங்கன் விரைவில் சந்திப்போம் பத்ரி நாராயணன் அவர்களே. நானும் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
      May 10 at 1:07pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ ரவி சாரங்கன்:- ///விரைவில் சந்திப்போம் பத்ரி நாராயணன் அவர்களே. நானும் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.///
      மிக்க மகிழ்ச்சி ஐயா.
      May 10 at 1:21pm · · 1 person
    • Oppilan Balu Muniyasamy வாழ்த்தியோருக்கு ..வாழ்த்துச் சொல்லும் உங்களின் பாங்கு ...வாழ்த்துவதர்க்குரியது ..வாழ்க வளமுடன் ..!
      May 10 at 8:47pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Oppilan Balu Muniyasamy:- ///வாழ்த்தியோருக்கு ..வாழ்த்துச் சொல்லும் உங்களின் பாங்கு ...வாழ்த்துவதர்க்குரியது ..வாழ்க வளமுடன் ..!///
      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. மனத்திலே உதித்தது. வார்த்தைகளாய் பதிந்தது. வாய்ப்பாய் அமைந்தது. முகநூலும் ஒரு வழியாய் அமைந்தது. அவ்வளவே நண்பரே. இனிய இரவு வணக்கம்.
      May 10 at 9:12pm ·


      விருப்பக்குறி இட்ட நண்பர்கள்:-

No comments: