Translate

Wednesday, June 22, 2011

காற்றாய் மறைந்தான்

கண்டேன் அவனை

கலந்தது கண்கள்

கவர்ந்தது மனமே.

காதலனாய் ஆனவன்

கணவனாய் மாற,

கடிமணம் புரிந்தோம்

கலந்தோம் வாழ்விலே.

கற்பூரமாய் கரைய

கடந்தது நாட்கள்.

காண்பவர் ஏங்க

காதலில் மிதந்தோம்.

கட்டிய தாலியோ

காயும் முன்னே,

கட்டியவன் உரிமை

கருவாய் இருக்க,

காதலனாய் திகழ்ந்த

கணவனவன் உயிரை,

கவர்ந்து சென்றான்

காலனவன் வந்தே.

கதி கலங்கி போனேன்

கண்களோ இருட்ட.

கண்டவர், கண்கள் பட்டது போல,

கருகியது வாழ்க்கை

முளை விட்டப் போதே.

முழுமதியாளனை

மூப்பில்லா தலைவனை,

முன்தள்ளிய வயிற்றுடன்

முன்பொட்டை இழந்தேன்.

கொடும்பாவியாய் எனை நினைத்து

கொடுத்தானோ தண்டனையை.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசினோம்

துள்ளி விளையாடினோம்

கொடுப்பினை இல்லையே

கோபுரமாய் நிலைத்து வாழ.

அவணியில் புகழ் அடைந்திடவே

அவன் நினைவாய் பெற்றெடுப்பேன்.

என் உழைப்பும்

மகன் புகழும்

அவனுக்கு சமர்ப்பிப்பேன்

அவன் ஆத்மா சாந்தியடைய.

No comments: