Translate

Sunday, September 11, 2011

தமிழாசிரியர் திரு.இராமலிங்கம்

எம்முடன் பணிநிறை தமிழாசிரியர் திரு.இராமலிங்கம் அவர்கள்.

புதிய உலகமாய்
புகுந்த ஊரும்
புதிதாய் தெரிய,
வாழ்க்கை நெறியை
வழக்கமான வழிக்கு
வகுத்துக் கொள்ள
நடப்பு செயல்களை
நாடினோம் முடிக்க .


புகுந்த இடத்திலும் 
புதிதாய் அறிமுகம்
பலவாய் இருக்க,
அதிலே ஒன்று 
அத்தியாய் இருக்க
ஆடிக் காற்றாய்
மனத்திலே மகிழ்ச்சி
விரிந்தே வீச

எம் தமிழ் ருசிக்க
மனமென்ற நிலத்தில்
குரு என்ற நிலையில்
தமிழெனும் (செந்தமிழ்) விதையை
தரமாய் பதித்து
தழைத்திட செய்த
ஆசிரியப் பெருந்தகை
அறிமுகமானார் நண்பராய் எமக்கு.

-தவப்புதல்வன்.

2 comments:

Anonymous said...

அதிஷ்டம் தான் . மகிழ்ச்சி....

Dhavappudhalvan said...

ஆமாம் சகோதரி.