Translate

Wednesday, December 9, 2015

என்று பொங்கும் சுதந்திர தாகம்



எங்கோ பிறந்த
தமிழருக்கெல்லாம்
தாய்மொழி தமிழென,
தமிழிலே பொரிக்க,

தமிழன்னை பிறந்த
பொற்கொடி நாட்டிலே
தயக்கமென்ன,
ஒரேழுத்து தமிழிலே எழுத.

கிடைத்த சுதந்திரம்
தமிழுக்கில்லையோ?
அடிமையுணர்வு
இன்னும் அகலவில்லையோ?

ஒருவரி எழுத
ஓராயிரம் சிந்தனைகள்
ஒற்றியதைப் பார்த்தால்
ஒன்பதை தாண்டுகிறது
எழுத்துப்பிழைகள்.


No comments: