சலனமின்றி ஒரு நொடி
சகலமும் நின்று போனால்!
சடுதியில் மாறுமே
சகலமும் தொடர்ந்து.
காலம்
வளர்பிறை முடிந்து
தேய்பிறையில்
வாழ்க்கை.
உல்லாசம்
இழந்தது
தன் *பொருளை.
*அர்த்தத்தை
அங்கிள் ஆண்ட்டி
வளம் கொழித்த தேன்தமிழில்
உயிரிழந்து மறைந்தது
பல உறவு சொற்கள்,
இவ்விரு சொல்லால்.
பண்ணார் தமிழே
கோடிகளில் நீ
கோடியில் நான்.
கொட்டட்டும் உன்னழகு.
கொஞ்சி நான் புனைய.
No comments:
Post a Comment