Translate

Thursday, November 26, 2015

என்னருமை காதலனே


சொல்லிவிட்டு போனதெங்கே?
தேடாத இடமெல்லாம்
தேடிவிட்டு நான் வந்ந்தால்,
விழி மூடி திறப்பதற்குள்
என் முன்னே நிற்பதின் மாயமென்ன?

கோடிக்கோடி வார்த்தைகளை
கொட்டி வளர்த்த காதலில்
கொட்டுதடா கொடுந்தேளாய்
கொடிகளில் புரட்டியெடுக்க.
களவாடி செல்லுமோ
காசினால் தனைமறந்து போகுமோ?

ஏற்றி வைத்த காதல்தீபம்
அணையும் முன்னே,
விரைந்து வந்து
ஏற்றி செல்வாய் குதிரை மேலே.

விஞ்ஞானம் மெய்ஞானம்
அலசிப்பார்த்தேன்.
அஞ்ஞானமதை பிரித்துப்போட்டேன்
அஞ்சா ஞானமென பகுத்துக்கொண்டேன்.

உறுதியுடன் நாமிருந்தால்
ஓடாத ஊருக்கு வழியெதற்கு.
செல்லுகிறது நாட்கள் விரைவாக.
விருப்பம் நிறைவேறும் மகிழ்வாக.

No comments: