Translate

Sunday, November 22, 2015

பல தினுசு



பாட்டிலே பலவாறாய்
பட்டியலாய் பதித்தாலும்
பாங்குடன் சொன்னாலும் 
பற்றித்தான் கொள்வாரோ ?
பற்றற்று விடுவாரோ?
பரதேசியென நினைத்து.

பயமேதும் இல்லையடா
பயங்கரமொன்றும் இல்லையடா
பறித்துத்தான் போடாமல்
பகிர்ந்துண்ணும் போதினிலே.
பார் உன்னை போற்றும்
பதமான வாழ்வமையும்.

பஞ்சு போல் நஞ்சினை
பந்தமும் பாந்தமாய்
பற்றித்தான் கொள்ளுமோ.
பற்றற்று வாழ நினைக்கையிலே
பட்டமாய் அலையுமோ

பலமில்லா இம்மனது.

No comments: