Translate

Sunday, November 1, 2015

நீண்ட நாள் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் 70க்கு மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள்  உள்ளனர். அதில் 10 பேர் கல்லூரி பேராசிரியர்கள்.

தமிழக அரசிடம் நீண்ட நாள் கோரிக்கைகள்:
1) மற்ற ஆசிரியர்களுக்கு கம்பியூட்டர் (கணினி) பயிற்சி அளிப்பதுபோல, பார்வையற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் (கணினி) பயிற்சி அளிக்க வேண்டும்.
2) பார்வையற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மேற்படிப்பை தொடர ஏதுவாக, வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள, ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல பார்வையற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்படிப்பு தொடர, தமிழக அரசும் வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள நிதியுதவி செய்ய வேண்டும்.

 இந்த கோரிக்கைகளுக்காக, ஐந்தாண்டுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நேரத்திலாவது எங்கள் கோரிக்கைகளை, முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடு ஏற்றுக் கருணை காட்ட வேண்டுமென, சேலம் மண்டல பார்வையற்ற ஆசிரியர்கள்  சங்க கிளை செயலாளர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 நாளிதழ் செய்தி. 24/10/2015

#எத்தனையோ இலவசங்கள். இது தேவையான முக்கிய உதவிதான். மனம் விசாலப்படவேண்டும்

No comments: