இறை தந்த செல்வமாய்
இணைந்திந்த வாழ்க்கை
இருவருக்கும் துணையாய்
ஈன்ற செல்வம் இரண்டாய்.
உல்லாச வாழ்க்கை
வாழ்விலே நிலைத்து,
உலகமதை சுற்றி
வானிலே பறக்க,
வளமும், நலமும்
வற்றாத நதியாய்
வேங்கடரசன் அருளால்
கரைப்புரண்டோட,
எந்நாளும் நீங்கள்
ஆனந்தத்தில் திளைக்க,
மனம் கொண்டு வாழ்த்தினோம்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
10/06/2015
No comments:
Post a Comment