Translate

Friday, June 27, 2008

நாள் ஒன்றிலே !....

நிலையாய் நினைவிலே
நில்லுங்களேன் நினைவுகளே.

செய்யும் செயலை
செம்மையாய் செய்திடவே.

வந்தது வரட்டுமென
வருவதை வரவேற்று,

நல்லது நடக்க
நலமதை நவில்வோம்.

எது என்று
எனை எண்ணியே,

ஏன் ஏங்கினேன்,
ஏதுமில்லா ஏமாற்றத்திற்கு.

அதுயென்று, அதற்கென்று
அலைந்தேன் அனைத்துக்குமே.

ஆகையால் ஆட்பட்டு-
ஆடினேன் ஆனந்தமில்லாமலே.

ஓராயிரம் ஓரங்களில்
ஓடிய ஓடம்,

ஒதுங்குமே ஒன்றுமில்லா-
ஒப்பனைகளாய் ஒரு புறத்திலே.

2 comments:

vetha (kovaikkavi) said...

நாள் ஒவ்வொன்றிலும் நிலையாய் நல்லது செய்வோம்.
Vetha.
Http://kovaikkavi.wordpress.com

Dhavappudhalvan said...

சகோதரி தங்கள் Http://kovaikkavi.wordpress.com லும் அருமையான கவிதைகளை படைத்து வருகிறீர்கள். தாங்கள் கருத்து பதித்தமைக்கு மகிழ்ச்சி.