Translate

Sunday, June 8, 2008

அழைத்துக் கொண்ட அழிவு.

அழகுயென்றே அணைத்துக் கொண்டேன்.

அரவமென பின்பே அறிந்துக் கொண்டேன்.

ஏனோ உதறித் தள்ளாமல், அதையே

என்னுடன் சுற்றிக் கொண்டேன்.

கக்கிய நஞ்சினை அறியாமல்,

அமிர்தமென நினைத்தே பூசிக்கொண்டேன்.

விடிந்ததும் உணர்வுகள் விழித்துக் கொள்ளும்,

உண்மை நிலையை அறிந்துக் கொள்ளும்.

நாளும் பொழுதும் கழிந்தாலும்,

நஞ்சின் வீரியம் குறையவில்லை.

படர்ந்த நஞ்சின் தன்மையினால்,

அழிவை நானே அழைத்துக் கொண்டேன்.

No comments: