விளையாட தெரியாமல் நான் விழிக்க,
ஒரு கையோசையாய் அதுவிருக்க
நெளிந்தேன் புழுவாய் வழியின்றி.
நாட்டமும் நோட்டமும் உன்னிடத்தில்
சிக்கினேன் உன்னிடம் வட்டத்தில்.
ஆட்டமுடன் பாட்டத்தில் நீயிருக்க
உனை இழந்து மனதினில் நான் துடிக்க
மலராதோ பூக்கள் இத்தோட்டத்தில்
காணாதோ கண்களினி வசந்தத்தை
முகராதோ நாசிகளினி வாசத்தை
தழுவாதோ இதழ்களினி ஸ்பரிசத்தை
புலம்பல்களோ பெரிதாக என்னிடத்தில்
புரியாமல் போனதேன் உன்னிடத்தில்.
அறிய தவறுவதேன் காலத்தில்
கழிந்திடுமோ நாட்களினி இக்கோலத்தில்.
காலம் கழிகிறது வேகத்தில்
மனத்தை திறப்பாயா என்னிடத்தில்
பறப்போமா காதலின் வேகத்தில்
மூழ்கிருப்போமோ நாம் மோகத்தில்
உன்னிடம் விடைக்காய் காத்திருக்க
உறக்கமின்றி நான் தவித்திருக்க
உள்ளத்தை அறியாததைப்போல் நீ நடிக்க
உழல்கிறதே மனமும் உன்னிடத்தில்
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment