Translate

Sunday, October 8, 2017

இப்படியும் மூடர்கள்


ஆறு மாத ஆண் கைக்குழந்தைக்கு விஷக்காய்ச்சல். தனியார் மருத்துவமனையில் நான்கு ஆயிரம் கேட்க, பணமில்லாததால், மகனை கிணற்றில் வீசி தாயும் உடன் தற்கொலை. செய்தி...
#பணமில்லாவிட்டால், அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம். அங்கு இலவச மருத்துவத்தில் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். ஒருவேளை மரணித்து விடுகிறது என வைத்துக் கொண்டாலும், அரசு உதவி கிடைத்திருக்கும். மகளான சிறிய பெண் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். அச்சிறிய பெண் குழந்தை தாயில்லா குழந்தையாகி விடுமே என்றுகூட எண்ணி பார்க்காமல் மகனுடன் தற்கொலை செய்து கொண்டது எந்த வகையில் சரியானது? இளம்தாயான இப்பெண் மீண்டும் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆண் குழந்தைதான் முக்கியமென கருதும் இது போன்ற மூடர்களும், முரடர்களும் வாழ்வது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற நிலைக்கு உறவும், சுற்றமும், அக்கம் பக்கமும் காரணிகளாக திகழ்வதையும் மறுக்கயியலாது. எப்போது மாறுமிந்த நிலை?
உங்கள் பக்கங்களிலும் மறுபதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: