அருவியாய் நீ
ஆனந்தத்தில் நான்
அணைத்துக் கொண்டோம் நாம்.
ஆற்றோரம் நீ
அருகில் நான்
அன்றிருந்தோம் நாம்
அள்ளித்தர நீ
அள்ளிக் கொள்ள நான்
ஆட்டத்தில் நாம்
அலையாய் நீ
ஆடுவதில் நான்
ஆறாய் நாம்
ஆறிலே நீ
அறுபதிலே நான்
அறிந்தோம் நாம்
அறிவொளியில் நீ
அதனொளியில் நான்
அகந்தையின்றி நாம்.
மோகனத்தில் நீ
மௌனமாய் நான்
மொட்டவிழ் நேரத்தில் நாம்
ஒதுங்கியிருந்தாய் நீ
ஒட்டியிருந்தேன் நான்
ஒன்றாய் நாம்..
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment