Translate

Tuesday, October 3, 2017

உறவின் துவக்கம்


படைத்த ஆண்டவன் ஆட்டி வைக்க,
படைக்க ஆண்டவன் உடனிருக்க,
பத்து மாதம் சுமந்த பின்னும் 
பக்குவமேனோ வரவில்லை.

படுத்து மகிழ்ந்த நினைவெல்லாம்
பஞ்சாய் பறந்து போகுதம்மா.
பழுத்த பழமாயிருந்தாலும்
பாழும் வலி கொல்லுதம்மா.

பகுதிகளாய் உயிர் நோக,
பார்த்து விட மனம் துடிக்க,
பறக்கும் நிமிடத்துளிகளால்
பரப்பரப்பு மேலும் மேலும் கூடுதம்மா.

பச்சபுள்ள பிறந்த்தும்
பாரம் குறைவாய் உணர்ந்தாலும்,
பாரம் புதிதாய் ஏறிக்கொண்டு
பால் வடிய செய்து விடும்.

பக்கம் பக்கமாய் மனத்திலே
பகுத்து பதியும் நினைவுகளுடனே,
பாசமாய் கை தழுவும்
பந்தமான புது வரவை.


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: