இறைவன் அளித்த வாழ்வு
மங்கல இசை முழங்க,
ஆன்றோர், பெரியோர்
ஆசிகள் வழங்க,
இணையோர் கைக் குலுக்கி
உம்மை தழுவி மகிழ,
சிறியோர் யாவரும்
--
ஆசிகளைக் கோர,
நலம் நாடும் நட்புகள்
வாழ்த்துகளைக் குவிக்க,
புத்துணர்வுடன் வாழ்வை
புதிதாக தொடங்கி,
புறமுதுகிட செய்வீர்
நூறுகளையும் இலகுவாய்.
தங்கள் இனிய பிறந்த நன்னாளில்
நமஸ்காரங்களுடன்
உடன்பிறவா,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment