Translate

Saturday, October 7, 2017

ஆஹா.. அருவி



அழகான ஊற்றது. 
அருவியாய் கீழது. 
ஆர்பரிக்கும் நீரிலே, 
அருயைான குளியலது. 

ஆனந்தம் குதி போட, 
அகன்று விட மனமின்றி, 
அடங்கா உற்சாகமிது
ஆட்டி வைக்கும் நேரமது.

அலையும் மனமுடன்
அளக்கும் கைகளும்
அணை கட்டி அளந்திட
அள்ளியள்ளி பார்த்திடும்

அத்தனை பேர்கிடையிலும், 
ஆட்டமிடும் முதுமையும். 
அ்ன்றிலிருந்து இன்று வரை, 

ஆகாய கங்கையது, 
அற்புத உணர்வது. 
ஆழமாய் உனை இழுக்கும். 
அளந்து பார்க்க மனம் துடிக்கும், 
அத்தனையும் நிகழும், 
அந்த ஒரு குளியலிலே.



--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: