Translate

Thursday, October 19, 2017

ஓயாது - குறுங்கவிதைகள்

தாண்டாதே
பாட்டி சொல்லை.
தட்டிக் கொடுத்தார்
பட்டினத்தார்.

============================

பாடும் வாய் 
பட்டம் விடும்.

========================

படித்தவன்
பத்தும் சொல்வான்
பட்டு நாம்
பகிர்ந்து கொள்வோம்.

=========================

பசித்தவனுக்கு
பழங்கஞ்சியும்
பஞ்சாமிர்தமே.

==========================

ஓடும் நீரெனினும்
ஓயாது
ஒரு மீனும்
ஒரு கொக்கும்.

==========================

No comments: