Translate

Saturday, October 21, 2017

சுயம்! சுயம்!! - 2



அனுபவப்பாடங்கள் அலையலையாய்
கற்றதை பலவும் நான் மறந்தேன்.
ஒரு சான் நானேற, 
ஒரு முழம் வழுக்கி விட,
இப்பக்கம் தவிர்த்து விட்டு
மறுபக்கம் ஏறி பார்க்க,
அப்பக்கமும் கீழிறங்க
வேறு பக்கம் தேடி செல்ல,
பல பக்கமும் வழுக்கி வழுக்கி
போதுமடா சாமியென 
ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆசைகள் தொடர்ந்து வர,
அதில் பலதை அடக்கி விட்டு,
ஆ ப் போகும் நாட்களினி
அவதிகளின்றி அது கழிய,
அனுதினமும் துதித்திருப்பேன்
ஆள்பவனை என்றுமினி.

தேவைகளைக் குறைத்துக் கொண்டால்???????

ஆழமான பெருமூச்சு 
பொருளுடன் வெளியேற,
ஆனந்தமாய் திகழ வேண்டும்
அவனடி புகும் நேரம்.

எழுதி வைத்த அவன் குறிப்பும்
என் குறிப்பும் இணைந்திடுமோ?
ஏற்று அவன் கொள்வானோ,
விரைவிலவன் திருவடியில்?
வாழ்ந்தது போதுமைய்யா
வாழ்வதினி பாரமைய்யா.

என்றவன் எனை அழைப்பான்
ஏக்கமுடன் நான் காத்திருக்க.
விரும்புகிறேன்
முன்கூட்டி உமக்கியம்ப.

எத்தனையோ நினைவுகள்
எழுத்துகளில் கொட்டி விட,
இயலுமா யானறியேன்
இந்நிலை மட்டும் உண்மையென
யான்றிவேன்.

-- 
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: