நட்புகள் இணைப்போ எண்ணூறு
போனால் போகட்டுமென ஓரிரண்டு
கருத்துக்கள் பெறுமே எம் படைப்பு.
குறிகள் சிலவோ கூடியிருந்து
குறுகுறுப்பூட்டும் எம் மனத்தில்.
அகத்தினை கிளறிட விருப்பமில்லை
அக்கப்போர் உரைத்திட யாமறியோம்
அரிதாரம் புனைந்திட அறியவில்லை.
எண்ணங்களாய் பல இணைந்து
ஆழமாய் உள்நுழையும் பெருமூச்சு
ஏக்கத்தில் எமை பொசுக்க, - எமக்கு
தகுதியில்லையோ உமையிழுக்க
போதுமடா சாமியென நினைத்தாலும்
நல்நட்புகள் சிலவோ வழி நடத்த
அதையும் இழந்திட விருப்பமில்லை.
ஆட்டமாய் ஆடும் எம் மனதை
ஆணியிட்டு நிறுத்திட தெரியவில்லை.
படைப்பால் மனது அமைதியடைய
இதுவே போதுமென முடிவெடுத்தேன்.
காரணத்தையும் இதுவரை அறியாமல்
தொய்வில்லா பயணமாய் தொடர்கிறது .
பறந்து விரிந்த இணைவலையில்.
வாழ்கவே நட்புகள் நீரென்றும்
வாழ்த்தியே பெறுகிறேன் விடையின்று.
நட்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment