சுயமாய் பிறப்பில்லை
சுகமான வளர்வில்லை.
யார் யாரோ கைப்பிடிக்க
மெல்ல நான் நடைப்பயில,
கற்றதும் சுயமில்லை
அனுபவங்கள் பட்டிருந்தும்
அதில் பல
அணைத்தெமக்கு ஊட்டவில்லை.
வெகுளியாய் நான்
வெள்ளேந்தியாய் இதுவரை.
இனியும் தொடருமோ
இறைவனே சாட்சியாய்.
கற்றது சிறுந்துளிகள்
கை விட்டதோ பெருந்துளிகள்.
ஒட்டிக் கொண்டது நூலிழையாய்
அது தாயின் ஓர் அனுமானம்.
ஊனமது ஆனபின்னே
உயிர்ப்பிக்க முடிவெடுத்து,
முக்கியெடுத்தார் மருத்துவத்தில்
முழுமையாய் எனையாக்க.
எழுத்தோ ஆழமாய்
எம் தலையில் பதிந்து விட,
சிறிதாக சலுகையவன்
எழுத்திலே மாற்றமிட்டு
கொடுத்தானே இந்நிலையை.
தொட்டதே போதுமென.
கோளுடன் நடை பயின்றேன்,
அறிவெனும் ஆற்றலடைய,
அனுகிரகம் அளித்தாலும்
அந்த வழி புறந்தள்ளி
ஏமாற்றி எனை கொன்றேன்.
விட்டு விட மனமின்றி
வழிய வந்து எனைக் கொண்டான்
தமிழுருவில் நடைப்பழக.
நல்லதோ கெட்டதோ நான்றியேன்
நவிலும் நாவுக்கு சூடுகள் பல கிடைக்க,
பழகிடுவேனோ இனியேனும் புது வழியில்
தங்க தமிழன்னை துணையுடனே.
வாழ்க்கை நிலை முடிவினிலே
வந்துறையும் நேரத்திலே,
வார்த்தைப் போரைத் தவிர்த்து விட்டு,
வாழ்த்துரையில் மகிழ்ந்திருப்பேன்.
வஞ்சனையின்றி வாசமாக
வாரி வழங்க அருள் கிடைத்தால்.
வயதான இக்காலமது
வதங்காமல்
அடைய வேண்டும்
இறுதியதை.
--
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment