Translate

Tuesday, October 17, 2017

சிற்பிக்கு





மானிட சிந்தனையால்
மாற்றத்தை குறிக்கொண்டு,
எழுத்துரு துணையுடனே
உருவொன்றை படைத்திட்டான்.
ஒன்றோடு ஒன்றாக
கலப்பட எழுத்துருக்கள்.
ஒட்டிக் கொண்டது நிலையாக,
பேச்சு வழக்கு நிலைப்போல.
எச்சங்கள் மிச்சங்கள்
எடுத்திட்டான் சிலையாக,
என்றுமது நிலைத்திருக்கும்
எக்காலம் ஆனாலும்.
தமிழுருவை நாம் புகழ,
ஒட்டிய எழுத்தால் அவர் மகிழ,
கோணலான எழுத்துளால்
கோணலின்றி அவன் வடித்தான் ( படைத்தான் ).
கனவில் பிறப்பெடுக்க,
வடித்திட்ட பிரம்மனவன்.
கைவண்ண
சிற்பிக்கு,
கையொலியால் சிறப்பளி்ப்போம்.
வாருங்கள் தோழர்களே!
வந்தெம்முடன் இணையுங்கள். 💐🌺🙏🏽

# சிலையுருவை கண்டதும்
சிதறிய எண்ணங்கள்,
சிக்கலின்றி இணைந்தது,
சீராக யான் வடிக்க. 😜

உங்களுடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

*இச்சிலை சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்து.

No comments: