உதயனன் வந்து விட,
உறக்கம் களைந்து விட
உற்சாக குளியலிட, அறையில்
உள்ளே புகுந்த போது...
உன் நினைவு கவ்விக் கொள்ள
உரியடித்து வரவேற்க
உள்ளம் பூம்புனலாய்
உவ்வகையுடன் கொப்பளிக்க
உருவேற்றிய பாடலது
உள்மனது ஒலிப்பரப்ப, - நீயும்
உள்நுழைந்தாய் மனத்துக்குள்ளே.
இனிய உதய வணக்கம் நட்புகளே.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment