Translate

Thursday, November 9, 2017

பலாபலன்



பள்ளிக்கொண்டான்
பாதம் தொழுதேன்.
பக்தியுடன் நானும்
பரந்தாமனென சரண்டைந்தேன்.

பாதைகளோ விடியல்களாக,
பட்டதெல்லாம் அனுபவமாக,
பழகியதெல்லாம் படிப்புகளாக,
படிந்ததே கம் நினைவுகளாக.

பவித்ரமாய் ஆக்கிவிட,
பாவியெனை ஆட்டி வைத்தான்.
பருவகாலம் போலயெனை
பார்வையிலே வைத்திருந்தான்.

பழமாய் நான் பழுக்க,
பக்குவமாய் பாதுகாத்து
பழுக்க வைத்தான்
பரிவட்டம் சூடியவன்

பாமாலை நானிசைத்து,
பரவசத்தில் ஆழ்த்தி அவனை, 🌹🌹🌹🌹🌹
பரமனடியில் சேர்த்துக் கொள்ள
பலனெனக்கு கொடுப்பானோ?


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: