Translate

Friday, November 17, 2017

கவிதையில் நான்



கற்றது துளியளவு
காண்பதும் சிறிதளவு.
கற்பனை மலையளவு
கா(க)ட்டுவது நுனியளவு.

அ போன்று தொடக்கமாய்
அகர வரிசை தொடர்களாய்
அதுவாக என் நினைவில்
அமைகிறது உருக்கொண்டு.

இயல்பாக அதுவமைய,
இதுதான் வேண்டுமென்று
இம்சித்துக் கொள்(ல்)வதில்லை
இன்று வரை, எனை நான்.

ஏறு கட்டி வைத்திடாமல்,
ஏக்கங்கள்  இல்லாமல்,
ஏற்றமாய் அதை நினைத்து,
ஏர் பூட்டி உழுகின்றேன்.

எள்ளென்றால் எண்ணையாக்க
ஏற்றமில்லை என் நிலையில்
எழுதுகின்றேன் ஏதேதோ
ஏற்றுக்கொள்வீரென நினைத்து.

கருக்கொள்ளும் எண்ணங்கள்
கலைந்திடாமல் ஒன்றிணைத்து,
கவிதையாய் நான் கருதி
கனியாய் உங்களிடம்
காணிக்கையாக்குகிறேன்

வக்கனையாய் கருதாமல்
வாசித்த உங்களுக்கு
வண்ணமய வாழ்வமைய
வாழ்த்தியே வணங்குகிறேன்.


-- 
கதைத்தது முனையளவு
உங்களுடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: