Translate

Monday, November 20, 2017

நேரமில்லை கணக்கு போட


எங்கோ என் பார்வை
மனமில்லை பார்வையில்
மனத்திலுமில்லை பார்வை.

ஓர் சலனம்
மனத்திலே ஓர் குறுகுறுப்பு
பின் கழுத்திலே ஓர் அரிப்பு.
யுகம் கழிந்த பரப்பரப்பு.
மனமும் பார்வையும் ஒருங்கிணைய
தன்னிச்சையாய் திரும்பினேன்.

ஓ… எனை நாடி நீயா???????????
திக்குமுக்காடியது எண்ணங்கள்
மகிழ்ச்சியின் வெள்ளத்தில்.
பிரிவின் காலம்
விடையில்லை கணக்குக்கு.

நேராமாயிது கணக்கு போட
நொடிகளில் நொடிந்து விட்டது.
புரிந்து விட்டது – நாம்
ஒருவரை ஒருவர் தேடி.


--
ஆக்கம்: ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: