Translate

Thursday, November 9, 2017

புது பாடம் - 7 - இரு பொருள் கவிதைகள்



வேலியில் நீ
வெள்ளாமையில் நான்
முள் - புல்

சுற்றுகிறாய் நீ
கைப்பிடியில் நான்
கோள் - கோல்

பாய்வதற்கு நீ
விழுவதற்கு நான்
வெள்ளம் - பள்ளம்

வாழ்க்கையில் நீ
வாழ்வதில் நான்
மகிழ்ச்சி - மன அமைதி

ஏற்பதில் நீ
பொய்யுரையில் நான்
தன்மானம் - அவமானம்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: