வேலியில் நீ
வெள்ளாமையில் நான்
முள் - புல்
சுற்றுகிறாய் நீ
கைப்பிடியில் நான்
கோள் - கோல்
பாய்வதற்கு நீ
விழுவதற்கு நான்
வெள்ளம் - பள்ளம்
வாழ்க்கையில் நீ
வாழ்வதில் நான்
மகிழ்ச்சி - மன அமைதி
ஏற்பதில் நீ
பொய்யுரையில் நான்
தன்மானம் - அவமானம்
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment