உணர்வுகளுக்கு தடையிட்டு,
உறக்கத்தில் நானாழ.
அங்கேயும் நீ
என்னுடன்
இணைந்துக் கொண்டாய்.
அன்று தான்
நீ அருகிலிருக்க
நான் பார்த்தேன்,
அளப்பரிய வனப்புகளை.
படைத்தவனின் திறமையது \ கருணையது.
பரந்து விரிந்த இயற்கையது.
பார்க்கும் விழிகளுக்கு
பரவசநிலையது.
--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment