Translate

Friday, November 10, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 1

ட்டிலில்


குழந்தைத் தொட்டில்
ஊஞ்சலாடுகிறது
மின்கம்பியில் தூக்கனாங்குருவி கூடு

இனிப்பு பலகாரம்
தூக்கில் தொங்குகிறது
கிணற்றில் வாளி

சொத்தை பல்
ஆடுகிறது
சாவிக்கொடுத்த பொம்மை.

ஈயம் போன பித்தளை பாத்திரம்
பல்லிளிக்கிறது
காரை பெயர்ந்த சுவர்

டெங்கு கொசுக்கள்
கொண்டாட்டம் போடுகிறது
அங்கொரு மனிதர் கூட்டம்



--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: