Translate

Monday, November 20, 2017

ஏனோ வந்தது அந்நினைவு.


கன்னியவள் கரு கொண்டாள்
கருவென அறியாமல்.
தலைச்சுற்றலால் கிறுகிறுத்தாள்
குமட்டலால் வாந்தி எடுத்தாள்
உணவு இறங்கவில்லை.
சுருண்டிருந்தாள்,
சுகமில்லையென நினைத்து.
பித்தமென நினைத்தாள்,
வித்தானது
முளை விட்டதை அறியாமல்.
நாள் ஓரிரண்டில்
சுகமாகுமென நினைத்தாள்,
மருத்துவரை புறந்தள்ளி.
தொடர்கதையாய்
குமட்டலும் வாந்தியும்,
உடல் சோர்வும் இணைந்து கொள்ள,
முடிவெடுத்தாள்
மருத்துவரிடம் கலந்துக் கொள்ள.
கைத்தொட்ட மருத்துவர் முகம் நோக்க,
ஏனோ வந்தது ஞாபகம் 🤔
அன்று கண்ட சுகம்.
--
ஆக்கம்: ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: