Translate

Monday, November 20, 2017

தடுமாறா தூரிகை



பல வண்ணங்களை
வாணவில்லாக,
திரைசீலையிலே தீட்டி விட்டேன்
தூரிகையால்.

விலகி நின்று ரசிக்கையில்,
மனம் நர்த்தனமாடுகிறது
வண்ணக் கலவையில்
ஜொலிக்கும் உன் திருமுகம்.

உதடுகள் இணையாமலும்
விழிகள் விலகமலும்
வண்ணங்களும் தூரிகையும் இணைந்து
பிரம்மானாய் உனை படைத்ததை கண்டு.

--
ஆக்கம்: ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏


No comments: