எண்ணங்களின் அலைமோதல்
எழுத்துக்களில் வரவில்லை.
ஏனினும் உணரவில்லை
எண்ணற்றோர் தம் நிலையை
தனையிழந்து,
தனது சொத்தை அழித்து
தன் குடும்பமதை நடுத்தெருவில்
தள்ளிவிடும் நிலைக்கு என் சொல்வேன்.
கல்விதனை கற்கவில்லை எனினும்
காணாதோ கண்கள் தன் குடும்பத்தழகை.
காட்டாற்று சுழலென அறிந்தும்
கவிழ்கிறானே தன் நிலை மறந்து.
விளம்பரங்களுக்கு குறைவில்லை
வீதியெங்கும் வரிவரியாய்.
விதியென தீர்ப்பளித்து
வீழ்கின்றனரே தாரகனிடம்.
#தாரகனிடம் = எமனிடம்
#குடி குடியை கெடுக்கும்.
உயிரையும் குடிக்கும்.
SyLvia VeLanganni Sebastian:
SyLvia VeLanganni Sebastian ஹாஹாஹா தவா சார்..
1 comment:
நட்புகளின் நல்லுரைகள்:-
Siva Srini Vasan: அழகு ஆக்கம் அன்புவணக்கம்.
Munuswami Muthuraman: Very good !
Sathiabama Sandaran Satia: Alagu
Aiyer Varada Rajan: உள்ளூற்றி
உயிரூற்றை
உருவற்றாக்கும்
உரிமமாரக்கு?
Dhavappudhalvan Badrinarayanan A M: தனதென்றே,
தான்தோன்றி தனமாய் ,
தறிக்கெட்டு அழைகின்றே
Post a Comment