அடடா... நண்பர்களாம்
அகால நேரத்திலும்
ஆனந்தத்தில் என்றுமே
அறுவையான பேச்சுக்களால்
அப்பந்தமான சிரிப்பால்
அதிருமே கூடுமிடம்.
அத்திப்பூத்த மலராக
அருகாய் சில நட்பு
அயலாய் இருப்பினும்
அவையடக்கத்துடனே
அனைத்திலும் ஒன்றாய்
அருமையாய் தொடருமே
அன்னையவள் பாசம் போல
ஆதரிக்கும் நட்புமுண்டு.
அன்றலர்ந்த மலராக
அன்பிலும் நட்பிலும்.
அணைத்தபடி உருண்டோடும்
அன்புக்கும் நிகருண்டோ
அத்துடன் நட்புக்கும் மேலுண்டோ
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment