நான் செல்லும் பாதையெல்லாம்
தொடரும் விழியை நானறிவேன்.
வாய் திறவா உன் நிலையாலே
மௌனமாய் செல்கின்றேன்.
மேய்ந்திட பார்க்கிறாயோ
வேலியற்ற பயிரென.
சந்தைப்பொருளாய் நினைத்தாயோ
விற்பனையில் பெற்று விட.
காலிலே மெட்டியிட்டு
காட்டிட வழியுமில்லை.- நெற்றிப்
பொட்டிடவும் முடியவில்லை
சாதியெனும் சட்டத்தால்.
புது வாழ்வு உனக்கென
வகுத்துக் கொண்டு,
குடும்ப வாழ்வில் மகிழ்வாக
நீயுயர்ந்து வாழ்ந்திடவும்
செல்லரித்த மனமுடனே
செல்லாக்காசாய் ஆகுமுன்னே,
அறியா உன் மனமும்
அறியட்டும் இதைப் படித்து.
பாசமுடன் நினைக்கின்றேன்
உடன்பிறவா நிலையிருந்தும்/.
No comments:
Post a Comment