மடை திறந்த வெள்ளமாய்
பெருமலை அருவி போல
சீற்றம் கொண்ட கடலலையாய்
சிதறி விழுந்த பூந்துளிகள்
சரசமாடியது என்னுடன்
சந்தோசமாய் நெடுநேரம்.
வயதது ஆனாலும்
குளியலிளொரு ஆனந்தம்.
குளிர்நீர் உடல் தழுவ,
பரவசத்தில் உள்ளமது
ஆட்டமது கொண்டதே
உச்சி முதல் பாதம் வரை.
பதமான நீராக்கி
பரவவிடும் பொழுதினிலே
உணர்வுகளில் ஊடுருவி
புதியதொரு புத்துணர்ச்சி
அறிய செய்யும் ஆனந்தத்தை.
காலத்தின் மாற்றங்களில்
கலந்து விடும் உள்ளுணர்ச்சி,
ஏற்பது தழுவிக் கொள்ளும்
அளவற்ற மகிழ்வுதனை நமதாக்கி.
குளியலோ குளியல்
குளியலறையில் குளியல்
No comments:
Post a Comment