ஏனோ?
அறியாத சொல் தேடி
அலுத்து போனேன்
அறிந்த சொல்லை, - ஏனோ
மறந்து போனேன்.
இல்லா உறவைத்
தேடித் போனேன்.
இருக்கும் உறவை, - ஏனோ
உதறிப் போனேன்.
இல்லவேயில்லை...
இதயம் ஒரு நாள்
இயங்கவே மறுநாள்
மறந்தால் அந்நாள்
காலடி மண்ணும்
சொந்தமது இல்லை.
ஏக்கத்திலே!
இரவிலோ ஓர் நினைவு,
கனவிலோ புது கனவு,
விடிந்ததும் பல நினைவு.
ஏந்தி வருவதோ அம்மனம்
ஏனிந்த (ஏ)மாற்றங்கள்?
#அம்மனம் = அந்த+மனம்
No comments:
Post a Comment