Translate

Thursday, August 21, 2014

ஏக்கத்திலே! - குறுங்கவிதைகள்


ஏனோ?


அறியாத சொல் தேடி 
அலுத்து போனேன் 
அறிந்த சொல்லை, - ஏனோ 
மறந்து போனேன்.

இல்லா உறவைத் 
தேடித் போனேன்.
இருக்கும் உறவை, - ஏனோ 
உதறிப் போனேன்.




இல்லவேயில்லை...

இதயம் ஒரு நாள் 
இயங்கவே மறுநாள் 
மறந்தால் அந்நாள் 
காலடி மண்ணும் 
சொந்தமது இல்லை.


ஏக்கத்திலே!

இரவிலோ ஓர் நினைவு,
கனவிலோ புது கனவு,
விடிந்ததும் பல நினைவு.
ஏந்தி வருவதோ அம்மனம் 
ஏனிந்த (ஏ)மாற்றங்கள்?

#அம்மனம் = அந்த+மனம் 

No comments: