சுதந்திரமாம் சுதந்திரம்
எல்லாவற்றிலும் சுதந்திரம்
கட்டுபாடில்லா சுதந்திரம்
கரைப்புரளும் சுதந்திரம்
அருமையான சுதந்திரம்
ஆனந்தத்தில் சுதந்திரம்
ஆடிப்பாடும் சுதந்திரம்
வாழ்வில் இந்த சுதந்திரம்
நிலைப்பதோ நம் கைகளில்
பழுதில்லா சுதந்திரம்
பாரதத்தாயின் கைகளில்,
என்றுமிந்த சுதந்திரம்
ஏந்திக் கொண்டிருக்கவே,
உழைக்க வேண்டும் அனைவரும்
உறுதிக் கொண்ட முனைப்பிலே.
பங்கு போடும் நினைவுகளால்
பாழ்படும் சுதந்திரம்,
கொள்ள வேண்டும் நினைவிலே
நிலைத்திருக்க சுதந்திரம்
ஒன்றிணையும் கைகளால்
ஓங்கி வளரும் சுதந்திரம்
புரிந்துக் கொண்டு செயல்படுவோம்
உரிமையுடன் வாழ்ந்திட.
பிரார்த்திப்போம் இறைவனை
காக்கும் எண்ணம் நிலைக்கவே.
உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய மக்களுக்கும், நேற்றுக் கொண்டாடிய, நாளைக் கொண்டாடவிருக்கும் இதர நாட்டு மக்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைவரின் இல்லங்களிலும் சந்தோஷம், சத்யம், உறுதி நிலைக்கட்டும். வாழிய நலனே. ஜெய் ஹிந்த்.
No comments:
Post a Comment