பேரனே!
ஆண்டவனின் பெருங்கருணை
இப்புவியுலகில் உன் பிறப்பும்,
இவ்வில்லத்தில் உன் வரவும்.
பேரின்ப திருநாளாய்.
செல்லட்டும் நிறைவாக
பெரும் மகிழ்வும் நலனுமாக.
உனை தாங்கிய தாய்க்கும்
பங்குக் கொண்ட தந்தைக்கும்,
தோழியான அக்காவுக்கும்,
உன் வளர்ச்சி நிலைக்கண்டு
ஆனந்தத்தை நல்கட்டும்.
நாளத்தில் பாசமோ
உணர்வுகளாய் ஊடுருவ,
கைகளில் உனைத்தானே
ஏந்தினோமே மென்மையாக.
No comments:
Post a Comment