வழியொன்றைக் கண்டிடவே,
வருவோரை போவோரை
வழி மறித்து கேட்கின்றேன்.
வந்தவரெல்லாம் மொழியின்றி தவிக்கின்றார்,
செல்பவரெல்லாம் வாய் மூடி செல்கின்றார்.
நானும் ஒரு நாள் அடைந்திடுவேன்
அன்று கூறிட முயல்கின்றேன்.
தெரிந்தால் நீங்களும் கூறிடுங்கள்
சரியாய் நானும் சேர்ந்திடவே.
No comments:
Post a Comment