Translate

Monday, August 11, 2014

சவர்க்காரக் குமிழிகள்….




சவர்க்காரக் கரைசலை
குப்பியதில் கையிலேந்தி,
சந்தோச நிலையுடன்
மென்னடையிட்ட பேரனார்
அருகில் வந்தார் குமிழெழுப்ப.

அப்பப்பா கையிலேந்தி
குமிழ்களிட்டார் நிறைவாக.
சவர்க்காரக் கரைசலோ
குமிழ்களாய் மேலெழும்ப,

ஆனந்தத்தில் பேரனார்
கைக்கொட்டி குமிழுடைக்க,
ஆர்பரித்த குடும்பமது
அமிழ்ந்ததே மகிழ்விலே.




#கவியரசி வேதா இலங்கதிலகம் அவர்கள்  '' வேதா வலை'' எனும் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ,  " சவர்க்காரக் குமிழிகள்…."
என்ற கவிதையை, அவர் கைப்பிடித்து நடக்க முயன்றிருக்கிறேன் எம் நடையில்.

#நன்றியம்மா. அருமையான தலைப்பில், நிகழ்வான தகவலை உணர்வோடு  வடித்தமைக்கும், அனுமதி அளித்தமைக்கும்.


கவியரசி வேதா இலங்கதிலகம்


No comments: