சவர்க்காரக் கரைசலை
குப்பியதில் கையிலேந்தி,
சந்தோச நிலையுடன்
மென்னடையிட்ட பேரனார்
அருகில் வந்தார் குமிழெழுப்ப.
அப்பப்பா கையிலேந்தி
குமிழ்களிட்டார் நிறைவாக.
சவர்க்காரக் கரைசலோ
குமிழ்களாய் மேலெழும்ப,
ஆனந்தத்தில் பேரனார்
கைக்கொட்டி குமிழுடைக்க,
ஆர்பரித்த குடும்பமது
அமிழ்ந்ததே மகிழ்விலே.
#கவியரசி வேதா இலங்கதிலகம் அவர்கள் '' வேதா வலை'' எனும் வலைதளத்தில் வெளியிட்டுள்ள , " சவர்க்காரக் குமிழிகள்…."
என்ற கவிதையை, அவர் கைப்பிடித்து நடக்க முயன்றிருக்கிறேன் எம் நடையில்.
#நன்றியம்மா. அருமையான தலைப்பில், நிகழ்வான தகவலை உணர்வோடு வடித்தமைக்கும், அனுமதி அளித்தமைக்கும்.
கவியரசி வேதா இலங்கதிலகம்
No comments:
Post a Comment