புருவங்கள் உயர,
பூவிழி நோக்க,
புதுமலராய் புவிதனில்
பூத்த நாளிது.
புலரும் பொழுதுகள்
புன்னகையுடன் மலரட்டும்.
புனையும் செயலெல்லாம்
புதுமையை சொல்லட்டும்.
பூத்துக் குலுங்கட்டும் மகிழ்வுகள்
பூவானமாய் சொரியட்டும் வாழ்த்துகள்.
புவனா, உன்
பூங்கரம் பிடித்த ரமேஷுடன் சேர்ந்து
நாங்களும் வாழ்த்தினோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment