Translate

Thursday, November 21, 2013

சர்வதேச குழந்தைகள் தினம். நவம்பர் 20



இந்தியாவில் குழந்தைகள் மேல் பிரியம் கொண்டிருந்த முன்னாள் பாரத பிரதமர், அமரர். ஜவர்கலால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ந் தேதியை 'தேசிய குழந்தைகள் தினம் ' ஆக கொண்டாடி வருகிறோம். 

உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்காக, நவம்பர் 20ம் தேதியை ' சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகத்தில் கொண்டாடப்படும் அனைத்து உலக தினங்களும், மேலைநாட்டு பிரமுகர்களுக்காக கொண்டாட படும்போது, நம் இந்திய தலைவர்கள், பிரமுகர்களுக்காக தேசிய அளவில் கொண்டாடப்படும் நாட்களை சர்வதேச நாளாக கொண்டாட, தக்க நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளலாம் அல்லவா?

# இந்தியரை பெருமைப்படுத்தும் விதத்திலும், நினைவுக் கூறத்தக்க வகையிலும்  ஏதேனும் சர்வதேச தினம் கொண்டாட படுகிறதா? விபரம் தெரிந்த நண்பர்கள் தெளிவு படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். 

* நாளிதழில் சர்வதச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படத்திற்கு, பதித்திருந்த கருத்து, மனத்தைத் தொடுவதாய் இருந்தது.

"அம்மா.. என ஆசையாய், உன்னை அழைப்பேன் என நினைத்தேன். மற்றவர்களிடம் ' அம்மா... பிச்சைப் போடு' என கேட்க வைப்பாய் என தெரிந்திருந்தால், நான் பிறக்காமலே இருந்திருப்பேன்."  

No comments: